"இந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் ஆங்கிலம் புகுத்தப்படுகிறது" - அண்ணாமலை குற்றச்சாட்டு

x

தமிழக அரசு, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறி தமிழக பா.ஜ.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்படது. இன்று 60 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, கடலூர் கிழக்கு மாவட்டம் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்த போராட்டத்தின் நோக்கம் திமுக சதித்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே என்று தெரிவித்தார். மேலும், இந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் ஆங்கிலத்தை தமிழக அரசு புகுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்


Next Story

மேலும் செய்திகள்