பள்ளிவாசலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு... எல்லைக்கல்லை பிடுங்கி எறிந்து மிரட்டல் விடுத்த நபர்கள்

x

கீழ்பென்னாத்தூரில், மஸ்ஜிதே தைய்யிப் சுன்னத் ஜமாத்துக்கு சொந்தமான பள்ளிவாசலுக்கு, சுமார் ஒன்றரை ஏக்கர் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த இடத்தில் ராஜா மற்றும் சுந்தர் ஆகிய இருவர், ஆக்கிரமிப்பு செய்து வந்துள்ளனர். இதுதொடர்பான புகாரின் பேரில், கீழ்பென்னாத்தூர் தாசில்தார் முன்னிலையில், இடம் அளவீடு செய்யப்பட்டு, எல்லையை குறிக்கும் கல் நடப்பட்டது. இதனிடையே, ராஜா மற்றும் சுந்தர் அந்த எல்லைக்கல்லை பிடுங்கி எரிந்து விட்டு, இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முற்பட்டதுடன், தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில், ராஜா மற்றும் சுந்தர் மீது வழக்குப்பதிவு செய்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்