சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம் - தொடரும் கிடுக்குப்பிடி விசாரணை

சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம் - தொடரும் கிடுக்குப்பிடி விசாரணை
x

ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் தனியார் மருத்துவமனை மருத்துவர்களிடம் போலீசார், கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில், இதுவரை தாய் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சுகாதார துறை அதிகாரிகள் விசுவநாதன் தலைமையில், ஈரோடு மாவட்டத்தில் அதிரடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி, பெருந்துறை தனியார் மருத்துவமனையை சேர்ந்த மூன்று மருத்துவர்கள், ஊழியர் உட்பட 5 பேரிடம், போலீசார் 4 மணி நேரத்திற்கும் மேலாக கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்