போதையில் பேருந்தில் தள்ளாடிய நபர்..படிக்கட்டில் இருந்து ஆக்ரோஷமாக கீழே தள்ளி விட்ட கண்டக்டர் - அதிர்ச்சி வீடியோ

x

வந்தவாசியில் அரசு பேருந்தில் மது போதையில் இருந்த நபரை, கண்டக்டர் கீழே தள்ளிவிட்டு சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவு 11 மணியளவில் வந்தவாசி பழைய பேருந்து நிலையத்திற்கு வந்த பேருந்தில், மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் இறங்க முடியாமல் தள்ளாடினார். அப்போது பேருந்தில் கண்டக்டராக இருந்த பிரகாஷ் என்பவர், மதுபோதையில் இருந்த நபரை இறங்குமாறு கூறியுள்ளார். ஆனால், தள்ளாடிக்கொண்டே படிக்கட்டில் அந்த நபர் நின்றதல், அவரை கீழே தள்ளிவிட்ட பிரகாஷ், பேருந்தை எடுத்துக்கொண்டு சென்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்