போதையில் சொந்த கடையை அடித்து உடைத்த திமுக பிரமுகர்... சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ - போலீசார் விசாரணை

x

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே திமுக பிரமுகர் ஒருவர், தனது தம்பியுடன் இணைந்து சொந்த கடையை அடித்து உடைத்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

வடுகபாளையத்தைச் சேர்ந்த குமார் என்கிற லிங்கத்துரை, திமுகவின் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளராக உள்ளார்.

இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்த நிலையில், தனது தம்பி மகாராஜாவுடன் இணைந்து, சொந்த கடையில் இருந்த பாட்டில்களை போதையில் அடித்து நொறுக்கினார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்