அதிகாரிகளை மிரட்டி அடிக்க பாய்ந்த திமுக பிரமுகர்.. தீயாய் பரவும் வீடியோ..! போலீஸ் முன்னிலையில்..

x

நெல்லை மாவட்டம் உவரியில் மீன் வளத்துறை அதிகாரிகளை, தகாத வார்த்தைகளால் திட்டும், திமுக பிரமுகரின் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உவரி மீனவ கிராமத்தில் 300-க்கு மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில், சிலர் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை பயன்படுத்தும் நிலையில், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்ற மீன்வளத்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர். அப்போது, அப்பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரான, அந்தோணிராய் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், காவல்துறையினர் முன்னிலையிலேயே அதிகாரிகளை தகாத வார்த்தைகளில் பேசியும், அடிக்க கையும் ஓங்கி உள்ளார். காவல்துறையினர் முன்னிலையில் நடைபெற்ற இந்த காட்சிகள் தற்போது வேகமாக வலம் வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்