தீபாவளி பண்டிகை - ரேஷன் அரிசி, சர்க்கரைக்கு பதில் பணம் - புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

x

தீபாவளி பண்டிகை - ரேஷன் அரிசி, சர்க்கரைக்கு பதில் பணம் - புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரைக்கான பணம் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோ சார்பில் தட்டாஞ்சாவடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அங்காடியை மாநில முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். சர்க்கரை, மைதா, ரவா, சமையல் எண்ணெய் உள்ளிட்ட 25 பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, தீபாவளி பாண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரைக்கான தொகையை பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்