தேவரியம்பாக்கம் கேஸ் குடோன் தீ விபத்து - பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

x

தேவரியம்பாக்கம் கேஸ் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் தேவரியம்பாக்கத்தில் உள்ள கேஸ் குடோனில் கடந்த 28 ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்தநிலையில் இந்த தீ விபத்தில் படுகாயமடைந்த தமிழரசன் என்னும் 11 வயது சிறுவனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். இதனால் கேஸ் குடோன் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது. தீ விபத்தில் படுகாயமடைந்த சக்திவேல் என்பவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், பூஜா, நிவேதா ஆகிய இருவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்