"கொஞ்சம் அசந்தா ஆட்டய போட்ருவாங்க" ரூ.500 வாங்கி பாக்கெட்டில் வைத்துவிட்டு பயணியை ஏமாற்றிய ஊழியர்

x

டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர் ஒருவர் பயணியை ஏமாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. டிக்கெட் கவுண்டரில் 125 ரூபாய் டிக்கெட் எடுக்க வந்த பயணியிடம், 500 ரூபாய் வாங்கிய ஊழியர், பணத்தை தன் பாக்கெட்டில் வைத்துவிட்டு, வெறும் 20 ரூபாய் மட்டுமே திருப்பி கொடுத்துள்ளார். ரயில் பயணியை ஊழியர் ஏமாற்றும் வீடியோ, வைரலாகி உள்ள நிலையில், ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்