"எங்களுக்கெல்லாம் கட்சி இல்லையா..""எங்களுக்கு எதுவும் தெரியாதா?" - மோதிக்கொண்ட பெண்கள்

x

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில், இலவச மனை பட்டா பெற்று தருவதாக கூறி ஏமாற்றிய பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகியுடன் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வட்டாட்சியரிடம் அளித்த மனுவின் அடிப்படையில் குறிப்பிட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்ட நில அளவையர், புறம்போக்கு நிலம் இல்லை என்று கூறினார்.

இதனால் கோபம் அடைந்த பெண்கள் பகுஜன் சமாஜ் கட்சியின் கடலூர் மாவட்ட மகளிர் அணி தலைவி வித்யாவுடன், வாக்குவாதம் செய்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்