ஆளுநருக்கு பேரவைத் தலைவர் அப்பாவு அழைப்பு | appavu | rnravi | tnassembly

x

சட்டப்பேரவை கூட்டத் தொடரில், உரை நிகழ்த்த வருகை தருமாறு, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பேரவைத் தலைவர் அப்பாவு அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின், 2023ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர், வருகின்ற ஜனவரி 9ம் தேதி ஆளுநர் உரை உடன் தொடங்கவுள்ளது. மேலும், அன்றைய தினமே அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் கூட்டப்பட்டு, ஆளுநர் உரை மீதான விவாதம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு வருகை தந்த பேரவைத் தலைவர் அப்பாவு, பேரவை மரபுப்படி, ஆளுநரை நேரில் சந்தித்து உரை நிகழ்த்த வருகை தருமாறு அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து, ஜனவரி 9ம் தேதி, காலை 10 மணிக்கு உரை நிகழ்த்த வருகை தருவதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்