5வது நாளாக... மிரட்டும் கொரோனா.. மீண்டும் வரும் கட்டுப்பாடுகள்..!!

கேரளாவில் தொடர்ந்து 5 வது நாளாக நேற்றும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
x

கேரளாவில் தொடர்ந்து 5 வது நாளாக நேற்றும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. கேரளாவில் நான்கு நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து வந்த நிலையில், நேற்றும் 1,465 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது குறித்து கவலைப்பட தேவையில்லை என தெரிவித்துள்ள அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமெனவும், அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்