இரவு முழுதும் பெய்த தொடர் மழை, வீடுகளுக்குள் புகுந்த மழை நீர், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

x

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், மழை காரணமாக 30-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட நீராவி மேட்டுக்குளம், கடந்த மாதம் பெய்த கனமழையால் நிரம்பி காணப்படுகிறது. இந்நிலையில், இரவு பெய்த தொடர் மழை காரணமாக மழை நீர் வெளியே செல்ல வழி இல்லாமல், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நிரம்பியது. இதில், 30-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்