தனது கடமையை முடித்து விட்டு சென்ற தூய்மை பணியாளருக்கு ஏற்பட்ட அவல நிலை

x

தெலங்கானாவில் சாலையில் நடந்து சென்ற தூய்மைப்பணியாளர்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மேதக் நகராட்சியில் தூய்மை பணியில் ஈடுபட்ட 5 பேர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் அதிவேகமாக வந்த கார் தூய்மை பணியாளர்கள் மீது மோதியது. இந்த விபத்தில், இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் அதிவேகமாக காரை இயக்கிய ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்