பெண் ஆசிரியரை சாதி பெயரை சொல்லி திட்டியதாக புகார்... ஆசிரியர் மீதான புகாரை மீண்டும் விசாரிக்க ஆணை

x

சக ஆசிரியையை சாதி பெயரை சொல்லி திட்டிய புகாரில், ஆசிரியர் மீதான ஒழுங்கு நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடலுார் மாவட்டத்தை சேர்ந்த உதவி ஆசிரியரான சிவகுமார், தன்னை சாதி பெயரை சொல்லி திட்டியதாக, ஆசிரியை ஒருவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகாரளித்தார்.

புகாரை விசாரித்த ஆணையம், ஆசிரியர் சிவக்குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து, புகாரை மீண்டும் விசாரிக்க ஆணையிட்டது.

அதுவரை சிவக்குமார் மீது நடவடிக்கை எடுக்க தடையும் விதித்தது.


Next Story

மேலும் செய்திகள்