"அடாது மழையிலும் விடாது பணி" - முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டரில் பாராட்டு

x

சென்னையில் தண்ணீர் தேங்கினாலும் உடனே வெளியேற்றப்பட்டு விடுகிறது என்று பொதுமக்கள் அரசை வாழ்த்துவதற்கு, உள்ளாட்சி பணியாளர்களின் இடைவிடாத பணியே முக்கிய காரணம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அடாது மழையிலும் விடாது பணியாற்றும் அந்த ஊழியர்களுக்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் திண்டுக்கல் நிகழ்ச்சியை முடித்து விட்டு, சென்னை வந்ததும் வேளச்சேரி கல்கி நகரில் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்