திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

x

திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைக்கும் ஆட்சியாக இருப்பதுதான் இந்த திராவிட மாடல் ஆட்சி என்று கூறியுள்ளார்.சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்க, அரசியல் எதிரிகள் சதித்திட்டம் தீட்டுவதாகக் குறைகூறியுள்ளார். நல்லரசைக் கெடுக்க நினைக்கும் நயவஞ்சகர்களின் எண்ணத்தை நசுக்க வேண்டிய பணி திமுகவினருக்கு உண்டு என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கழக சட்ட விதிகளின்படி, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள விளையாட்டு மேம்பாட்டு அணி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி உள்பட 23 அணிகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதில் ஒரு சிலருக்கு வாய்ப்பின்றிப் போயிருக்கலாம், கிடைத்திருக்கும் வாய்ப்பு போதவில்லை என ஒரு சிலர் நினைக்கலாம் என்றும் கூறியுள்ளார். கட்சியை நம்பினோர் ஒருபோதும் கைவிடப்படார் என்று குறிப்பிட்டுள்ள அவர், உண்மையாக உழைப்பவர்களின் எதிர்பார்ப்புகள் அடுத்தடுத்த வாய்ப்புகளில் நிச்சயம் நிறைவேறும் என்று உறுதிகூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்