ஆதீனத்திற்கு சொந்தமான கோவிலில் - பணியாளர்கள் - சிவனடியார்கள் இடையே மோதல்

x

மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஐயாரப்பர் ஆலயத்தில், 52 ஆவது மாத திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வந்த ஆதீன மடத்தின் பணியாளர்கள், ஆகம விதிப்படி மதியம் ஒரு மணிக்கு நடை சாத்த வேண்டும் என்று கூறி சிவனடியார்களை வெளியேற்றியுள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், சிறுவன் மற்றும் பெண் ஒருவரை ஆதின மடத்தினர் தாக்கியதாக, சிவனடியார்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை நடத்தியபோது இருதரப்பினரும் பேசி சமரசம் செய்து கொண்டனர். இந்நிலையில் சிவனடியார் கூட்டத்தை வெளியேற்றும்போது ஏற்பட்ட மோதல் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்