நாளை முதல் சோழர்கள் ஆட்டம் - எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா மணிரத்னம்?

x

நாளை முதல் சோழர்கள் ஆட்டம் - எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா மணிரத்னம்?

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் நாளை வெளியாகிறது.

கிபி 900ஆம் ஆண்டு புகழ்பெற்று விளங்கிய சோழர்களின் வரலாறை தழுவி 1950ஆம் ஆண்டில் பொன்னியின் செல்வன் என்ற நாவலை கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதினார். இந்த நாவலை படமாக உருவாக்க முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., கமல்ஹாசன் உள்ளிட்டோர் முயன்றும் எடுக்க முடியாமல் போனது. 2010ஆம் ஆண்டு விஜய் உள்ளிட்டோரை வைத்து படத்தை மணிரத்னம் உருவாக்க முயன்று எடுக்க முடியவில்லை. ஒருவழியாக 2019ஆம் ஆண்டு லைகா நிறுவனத்துடன் இணைந்து பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை இயக்குநர் மணிரத்னம் தொடங்கினார். விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம்ரவி, திரிஷா என பெரிய நட்சத்திர பட்டாளமே ஒப்பந்தம் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்