"குழந்தைகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை" லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்..!

x

மதுராந்தகம் அருகே அதிவேகமாக ஊருக்குள் நுழைந்த, கல்குவாரி லாரிகளை ஊர்மக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தச்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், மூன்று கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே லாரிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இரவு முழுவதும் நூற்றுக்கணக்கான லாரிகள், அதிவேகமாகவும் பயங்கர சத்தத்துடனும் செல்வதாக ஊர்மக்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் விதிகளை மீறியதாக கூறி, கல்குவாரி வாகனங்களை ஊர்மக்கள் திடீரென சிறைபிடித்தனர். லாரிகள் வேகமாக செல்வதால் விபத்து ஏற்படுவதாக தெரிவித்த அவர்கள், வீடுகளில் அதிர்வுகள் ஏற்படுவதால் சுவர்களில் விரிசல் விழுவதாகவும் புகார் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்