கொஞ்சம் கூட அச்சமின்றி தீயை விழுங்கும் சிறுவர்கள்

x

தீயை விழுங ்கும் விநோத வழிபாடு புதுக்கோட்டையில் நிகழ்ந்துள்ளது... புதுக்கோட்டை மாவட்டம் மேலப் புள்ளான் விடுதியில் கற்பக விநாயகர் கோயில் அமைந்துள்ளது... இங்கு தீயை விழுங்கும் வழிபாடு வருடந்தோறும் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு விழாவுக்காக விநாயகருக்கு சிறப்பு பூசைகள் செய்யப்பட்டன... தொடர்ந்து பிள்ளையாருக்குப் பிடித்தமான அவல், பொரி, கடலை, எள்ளுருண்டை, அப்பம், கொழுக்கட்டை, பொங்கல், சுண்டல் போன்ற பதார்த்தங்கள் படையலிடப்பட்டன. தொடர்ந்து மாவிளக்கில் திரி வைத்து அதில் தீயைப் பற்ற வைத்து அப்படியே விழுங்கி தங்கள் விநோத வழிபாட்டை மக்கள் நிறைவேற்றினர்... இந்நிகழ்வில் குழந்தைகளும் கூட கொஞ்சம் கூட பயமின்றி பக்திப் பரவசத்துடன் பங்கேற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது...


Next Story

மேலும் செய்திகள்