"லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு செக் வைத்த முதல்வர்"

ஆந்திராவில் ஊழலை தடுக்கும் வகையில் புதிய செயலியை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.
x

ஆந்திராவில் ஊழலை தடுக்கும் வகையில் புதிய செயலியை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். அதிகாரிகள் ஊழல் செய்வது குறித்தும், லஞ்சம் வாங்குவது குறித்தும் புகார் அளிக்க லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில், நேரில் செல்வதற்கு பதிலாக, செல்போனில் இருந்து புகார் தெரிவிக்க புதிய செயலியை லஞ்ச ஒழிப்புத்துறை உருவாக்கியுள்ளது. இந்த செயலியை தடேப்பள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் இருந்து முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். இந்த செயலியில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் குறித்து புகார் அளித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது



Next Story

மேலும் செய்திகள்