"கார்த்திக் சிதம்பரம் கிராமங்களுக்கு வருவதில்லை" - ப.சிதம்பரத்திடம் நிர்வாகிகள் வாக்குவாதம்... ஆலோசனைக் கூட்டத்தில் பரபரப்பு

x

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது, கார்த்திக் சிதம்பரம் கிராமங்களுக்கு வருவதில்லை என்றும், யாருடைய பெயரும் அவருக்கு தெரிவதில்லை என்று குற்றம்சாட்டினர். கார்த்திக் சிதம்பரத்திற்கு பக்குவம் இல்லை என்று குற்றம் சாட்டினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்