சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர் - முதல்நாளில் களமிறங்கிய அங்கிதா ரெய்னா, கர்மன் தாண்டி

x

சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியின், முதன்மை சுற்றுப்போட்டிகள் இன்று முதல் தொடங்குகிறது.

சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரில், இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த தகுதிச்சுற்று போட்டிகள் நிறைவடைந்தன. இந்நிலையில் இன்று முதல், முதன்மை சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில், வரும் 18 ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு முதன்மை சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன. தகுதிச்சுற்றில் பங்கேற்ற 24 பேரிலிருந்து 6 வீராங்கணைகள் முதன்மை சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். முதல்நாளில் நடைபெறும் ஆட்டங்களில் இந்திய வீராங்கனைகள் அங்கிதா ரெய்னா, கர்மன் தண்டி ஆகியோர் முறையே ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் வீராங்கனைகளை எதிர்கொள்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்