வீட்டில் உள்பக்கமாக தாழிட்டுக் கொண்ட குழந்தை - 'அம்மா அம்மா' என கதறும் காட்சிகள்

x

வீட்டில் உள்பக்கமாக தாழிட்டுக் கொண்ட குழந்தை - 'அம்மா அம்மா' என கதறும் காட்சிகள்

சென்னையை அடுத்த பாடி டி.எம்.பி. நகரில் திருமலை என்பவரின் 2 வயது மகள் ரித்திகா, வீட்டிற்குள் இருந்தபடி கதவை மூடினார். தானாக பூட்டிக் கொள்ளும் அமைப்புடன் இருக்கும் அந்தக் கதவை, வீட்டுக்கு வெளியே இருந்த திருமலையும் அவரது மனைவியும் திறக்க முடியாமல் தவித்து, அம்பத்தூர் தீயணைப்பு துறைக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த முத்துகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சாதுரியமாக குழந்தையிடம் பேச்சு கொடுத்து, கதவைத் திறந்து குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்