கல்யாணம் பின் தொடர்ந்த கள்ளக்காதல்.. உல்லாச மோகத்தால் கணவருக்கு நேர்ந்த விபரீதம் - பட்டியல் போட்டு தூக்கிய போலீசார்

x

திருவண்ணாமலை அருகே கணவனை கொலை செய்த விவகாரத்தில் மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், கடுகனூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமிகாந்த், கடந்த 23-ஆம் தேதி, வீட்டிலிருந்து சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் அவரது உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டதில் அவரது மனைவி ராஜேஸ்வரிக்கு உதயசூரியன் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனிடையே, ராஜேஸ்வரியும், உதயசூரியனும் சேர்ந்து லட்சுமிகாந்தை கொலை செய்ய திட்டுள்ளனர். அதன்படி, கடந்த 23-ஆம் தேதி உதயசூரியனும் அவரது உறவினர் பாண்டியன் என்பவரும் லட்சுமிகாந்தை மது அருந்துவதற்காக அழைத்துச் சென்று போதையில் இருந்த அவரை கொலை செய்துள்ளனர். இதையடுத்து ராஜேஸ்வரி, உதயசூரியன் மற்றும் பாண்டியன் ஆகியோரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்