நடுரோட்டில் நிறுத்திய இன்ஸ்டாகிராம் நட்பு-காரில் கடத்தி சென்று செயின் மற்றும் செல்போன் பறிப்பு

x

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் பகுதியை சேர்ந்தவர் காத்தவராயன். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான செந்தில்குமார் என்பவரை தனது ஊர் திருவிழாவிற்கு அழைத்துள்ளார். கப்பலூர் சுங்கசாவடிக்கு காரில் வந்த செந்தில்குமார், காத்தவராயனுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து., வழி தெரியவில்லை என்றும், தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறும் கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் காத்தவராயனை காருக்குள் ஏற்றிய செந்தில்குமார் மற்றும் அவரது நண்பர்கள், கத்தியை காட்டி மிரட்டி, காத்தவராயனிடமிருந்து செயின் மற்றும் செல்போனை பறித்துள்ளனர். தொடர்ந்து காத்தவராயனின் ஆடைகளை பறித்து போட்டோ எடுத்துள்ளனர். மேலும் காவல் துறையினரிடம் புகார் அளித்தால் போட்டோவை ஆன்லைன் பதிவிடுவதாக கூறி மிரட்டி, முட்கள் நிறைந்த காட்டுப்பகுதியில் காத்தவராயனை இறக்கிவிட்டு சென்றுள்ளனர். அங்கிருந்து தப்பித்து வந்த காத்தவராயன், திருமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து செந்தில்குமார் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்