"சமூக நீதியை மத்திய அரசு உடைத்துக் கொண்டிருக்கிறது" - திமுக எம்.பி கனிமொழி குற்றச்சாட்டு

x

சமூக நீதியை மத்திய அரசு உடைத்துக் கொண்டிருப்பதாக, திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக மகளிரணி சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 4 ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் கருத்தரங்கம் சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ்ப் பேரவை அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கீதாஜீவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, என்எல்சியில் தமிழர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படுவதாக தெரிவித்தார்.

சமூக நீதியை மத்திய அரசு உடைத்துக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டிய அவர், இதனை குழந்தைகளுக்கு, பெண்களுக்கு புரிய வைப்பதுதான் கருணாநிதிக்கு செய்யும் கைமாறு என்றார்.

தொடர்ந்து பேசிய துரைமுருகன், இந்தியாவில் எந்தக் கொம்பனாலும் ஒழிக்க முடியாத தேவதாசி முறையை, தமிழ்நாட்டில் முத்துலட்சுமி ரெட்டியால் ஒழிக்க முடிந்த‌தாக பெருமிதம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்