ஹோட்டலில் புகுந்து ஹாயாக ஷவர்மா சாப்பிட்ட பூனைகள் - தீயாய் பரவும் காட்சிகள்

x

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஹோட்டலில், ஷவர்மா பாத்திரத்தில் 2 பூனைகள் ஏறி, ஷவர்மா சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.பையனூர் பகுதியில் உள்ள ஹோட்டலில், ஷவர்மா தயார் செய்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது.

அப்போது, சமையலர் இல்லாத வேளையில், அங்கு புகுந்த 2 பூனைகள், ஷவர்மா சாப்பிட்டுக் கொண்டிருந்தன.

இதனை அந்தப் பகுதியை சேர்ந்த ஒருவர், வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்த சம்பவத்தில், பூனைகள் சாப்பிட்ட ஷவர்மா முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டதாக ஹோட்டல் தரப்பில் கூறினாலும், அலட்சியமாக செயல்பட்டதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்