ஜெயலலிதாவிற்கு எதிரான வழக்கு - தீபக், தீபாவுக்கு அதிரடி உத்தரவு

x

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக வருமான வரித்துறை தாக்கல் செய்திருந்த 3 வழக்குகளில், அவரது வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 1995 ஆம் ஆண்டு அவரது வளர்ப்பு மகன் சுதாகரன் திருமண அலங்காரத்திற்காக, 59 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் செலவு செய்ததாக கூறி, ஜெயலலிதாவின் வருமான வரி கணக்கில் சேர்த்து அதன் அதிகாரி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இது தொடர்பாக வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்து பிறப்பித்த 3 உத்தரவுகளையும் எதிர்த்து, வருமான வரித்துறை ஆணையர் வழக்கு தொடந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவரது சட்டப்பூர்வ வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் இது குறித்து, 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்