காரில் லைட்டாக விழுந்த கீறல்... இளைஞரை விரட்டி விரட்டி அடித்த நபர் - தாம்பரத்தில் அதிர்ச்சி

காரில் எதிர்பாராதவிதமாக கீறல் ஏற்படுத்தியவரை சரமாரியாக தாக்கிய ஆசாமியிடம் இருந்து இளைஞரை பொதுமக்கள் மீட்டனர்.
x

தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசலின் போது இளைஞர் ஒருவர் முன்னே சென்ற காரின் மீது எதிர்பாரதவிதமாக உரசியுள்ளார். இளைஞர் மன்னிப்பு கேட்டும், கார் உரிமையாளர் இளைஞரை சரமாரியாக தாக்க தொடங்கினார். இதனை கண்ட அப்பகுதியினர் காரில் உரசினால் போலீஸில் புகார் செய்யுங்கள் என்றும் எப்படி நீங்கள் அடிக்கலாம்? என்றும் கோபத்துடன் சரமாரியாக கேள்வி எழுப்பினர். மேலும், பொதுமக்கள் திரண்டதால் சுதாரித்துகொண்ட கார் உரிமையாளர் காரை எடுத்துகொண்டு அங்கிருந்து தப்பி சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்