குஜராத்தில் இன்றுடன் பிரச்சாரம் முடிவு.. நாளை மறுநாள் முதல்கட்ட வாக்குப்பதிவு

x

குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைய உள்ளதால், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டபேரவைக்கு, 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 89 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைய உள்ளதால், அரசியல் கட்சிகள் பம்பரம் போல் சுழன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு வரும் 5ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் 8ஆம் தேதி நடைபெற உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்