சூடு பிடித்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. களத்தில் இறங்கிய பறக்கும்படை

இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்ட, பறக்கும் படை அதிகாரிகள் தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது...

தற்போது நடைபெற்ற வரும் இன்று சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக கொண்டு செல்லப்பட்டால் உடனடியாக இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு, கருவூலத்திற்கு அனுப்பப்படும் எனவும், பணத்திற்கான உரிமையாளர்கள் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த பின்னர் பணம் திருப்பி கொடுக்கப்படும் எனவும், இதேபோல், உரிய ஆவணங்கள் இன்றி சந்தேகத்திற்கிடமான பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் வாகனங்களில் கொண்டு சென்றால், பறிமுதல் செய்யப்படும் எனவும் தேர்தல் நடத்தும் அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ளது...



Next Story

மேலும் செய்திகள்