அம்பத்தூரில் 5 லட்சம் கேட்டு தொழிலதிபர் கடத்தல் - சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்

x

சென்னை அம்பத்தூரில் 5 லட்சம் கேட்டு தொழிலதிபரை கடத்திய கும்பலை, சினிமா பாணியில், போலீசார் விரட்டி பிடித்தனர்.


அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த 28 வயதான தொழில்அதிபர் ஜெயராமனும், தேவராஜ் என்பவரும் ரியல் எஸ்டேட் துறை மூலம் நண்பர்கள் என கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே கொடுக்கல், வாங்கலில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. கடந்த வியாழக்கிழமை ஜெயராமனை தொடர்பு கொண்ட தேவராஜ், அவரது இருப்பிடம் கேட்டு அறிந்துள்ளார்.அங்கு தனது நண்பர்கள் 5 ஐந்து பேருடன் சென்று அவரை காரில் கடத்தியுள்ளார். பின்னர் ஜெயராமனின் மனைவி சிவரஞ்சனியை தொடர்பு கொண்டு 5 லட்சம் ரூபாய் கொடுத்து கணவரை கூட்டி செல்லுமாறு மிரட்டி உள்ளனர். பதட்டம் அடைந்த சிவரஞ்சனி அம்பத்தூர் தொழில்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பணம் தருவதாக போலீசார் நூதன முறையில் பேசி வரவழைத்தனர். அம்பத்தூர் வந்த அவர்கள் போலீசாரை கண்டதும் தலைதெறிக்க ஓட முயன்றனர். அப்போது சினிமா பணியில் விரட்டிச்சென்று அவர்கள் பிடித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்