பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - புனித யாத்திரை சென்றபோது நேர்ந்த சோகம்

பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - புனித யாத்திரை சென்றபோது நேர்ந்த சோகம்
x

உத்தரகாண்டில் பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது.மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தை சேர்ந்த 28 பேர், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சார்தாம் புனித யாத்திரைக்கு பேருந்தில் சென்றனர். உத்தர்காசி மாவட்டம் டாம்டா அருகே சென்ற போது பேருந்து பள்ளத்தாக்கில் கவிந்து விபத்துக்குள்ளானது. இதில், 22 பேர் உயிரிழந்த நிலையில், 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், மேலும் 2 பேரை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், நேரில் சென்று காயமடைந்தோருக்கு ஆறுதல் கூறினார். மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு தலா 50 ஆயிர‌மும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதே போன்று நிவாரணம் அறிவித்துள்ள பிரதமர் மோடி, இறந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்