எரிந்து கொண்டே ஓடிய பேருந்து - அலறிய பயணிகள் -பற்றி எரியும் பரபரப்பு காட்சி | rajasthan

x

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தனியார் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பயணிகள் அச்சமடைந்தனர். ஜோத்பூரின் பனார் காவல்நிலையத்தின் அருகில் இருக்கும் பேருந்து நிலையத்தில், தனியார் பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்தது. திடீரென பேருந்தில் பற்றிய தீ வாகனம் முழுவதும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது. தீப்பரவலால் பேருந்தின் கண்ணாடிகள் வெடித்து சிதறியதால் அங்கிருந்த பயணிகள் அச்சமடைந்தனர். தகவலறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்