சகோதரியை பழிவாங்க சகோதரன் செய்த செயல்..

x

சகோதரியை பழிவாங்குவதற்காக காரை திருடிச் சென்ற சகோதரனை, சென்னையில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை குரோம்பேட்டை அடுத்த போஸ்டல் நகர் பகுதியை சேர்ந்தவர் தேன்மொழி. வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது சொகுசு கார் காணாமல் போனதால் தேன்மொழி அதிர்ச்சி அடைந்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது தேன்மொழியின் சகோதரரான ஆதி நாராயாணன் என்பவர், காரை திருடி சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து ஆதி நாராயணன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அரவிந்தன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து, சொகுசு காரையும் மீட்டனர்.

இதுகுறித்து ஆதிநாராயனனிடம் நடத்திய விசாரணையில், சொத்துகள் அனைத்தையும் தந்தை, சகோதரியின் பெயரில் எழுதி வைத்துவிட்டு இறந்ததால், அவரை பழிவாங்குவதற்காக காரை திருடிச் சென்றதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்