வெளிநாடுகளில் குடித்து கும்மாளம்... முக்கிய எம்.பி.க்கள் அடுக்கடுக்காக பாலியல் குற்றச்சாட்டு..! - கடும் அதிருப்தியில் பிரதமர்

x

பிரிட்டன் எம்பிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரிட்டனில் அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுக்களில் இடம்பெற்றுள்ள எம்பிகளுக்கு பல சிறப்புரிமைகள் உள்ளன. குறிப்பிட்ட விஷயங்களுக்காக இவர்கள் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடவும் அறிக்கைகளைத் தயாரிக்கவும் நிகழ்ச்சிகளை நடத்தவும் அனுமதி உண்டு. இப்படியான130 குழுக் கள் பிரிட்டனில் உள்ளன. மேலும், வெளிநாட்டு அரசுகளோ தனியார் அமைப்புகளோ அளிக்கும் நிதியுதவியில், உண்மையறியும் குழுக்களில் வெளிநாட்டுப் பயணங்களையும் இவர்கள் மேற்கொள்ளலாம். சில ஆண்டுகளாக இந்தக் குழுக்களில் உள்ள பல எம்.பி.கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வைக்கப் பட்டுள்ளன. இதுகுறித்து பெயர் குறிப்பிடாமல் சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி எம்பிக்கள் மீது ஊடகச்செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பிரதமர் சுனக் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும், உரிய தீர்வு கிடைக்குமென நம்புவதாகவும் அவரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்