தாம்பரம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை.. திடீரென தொற்றிய பரபரப்பு

குருவாயூர் விரைவு ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரு மணி நேரம் சோதனை மேற்கொள்ளப்பட்டது
x

குருவாயூரில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி குருவாயூர் விரைவு ரயில் நேற்று வந்து கொண்டிருந்தது. இந்த ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, காவல்துறை கட்டுப்பாடு அலுவலகத்துக்கு அடையாளம் தெரியாத நபர் தகவல் தெரிவித்தார். தாம்பரம் ரயில் நிலையத்துக்கு வந்த குருவாயூர் விரைவு ரயிலில், ரயில்வே பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்த மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு அனைத்து பெட்டிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. மேலும், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலக வெடிகுண்டு நிபுணர்களும் ரயிலில் சோதனை நடத்தினர். ஒரு மணி நேரம் சோதனை நடத்தப்பட்ட நிலையில், வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை.


Next Story

மேலும் செய்திகள்