காலையில் தாயுடன் பிறந்தநாள் கொண்டாட்டம் - வீடு திரும்பியதும் மகள் எடுத்த விபரீத முடிவு

x

சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் பிறந்த நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் கல்லூரி மாணவி ஹெலன். இவருடைய தந்தை கடந்த 9 வருடத்திற்கு முன்பு உயிரிழந்த நிலையில், தாய் மேரி பிரேமாவுடன் தனியே வசித்து வந்துள்ளார். இந்நிலையில், பிறந்த நாளை முன்னிட்டு காலையில் தாயுடன் சர்ச்சுக்கு சென்று வீடு திரும்பிய ஹெலன், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தற்கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்