மெரினா சாலை பிளாட்பார்ம் மீது மோதிய பைக் - இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு | Marina

x

சென்னை மெரினா கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற இருவர் பிளாட்பார்ம் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் அஷ்வந்த். இவரின் நண்பர் கிஷோர். இருவரும் இரவு 10 மணியின் போது, இரு சக்கர வாகனத்தில் சென்னை மெரினா கடற்கரை அருகே கண்ணகி சாலையில் அதிவேகமாக சென்றுள்ளனர்.

அப்போது வாகனம் கட்டுபாட்டை இழந்து பிளாட்பார்ம் மீது மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் வாகனத்தை ஓட்டி வந்த அஷ்வந்த் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்த நிலையில், கிஷார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்