பற்ற வைத்ததும் வெடித்து சிதறிய சிலிண்டர் - ஒருவர் பலி

x

ஆவடி அருகே வீட்டில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். ஆவடி அருகே கோவில் பதாகை, கலைஞர் நகரில் 15-வது தெருவில் ரோஜா என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று இரவு, இவர் வீட்டில் அடுப்பை பற்றவைத்தபோது, எதிர்பாராத விதமாக சமையல் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ரோஜா, அவரது மகன் சங்கர் ராஜ், அவரது பேத்தி கிருத்திகா, பேரன் கௌதம் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ரோஜா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முதற்கட்ட விசாரணையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சிலிண்டரில் எரிவாயு கசிவு ஏற்பட்டதில் ரெகுலேட்டரை மாற்றியதாகவும், எனினும் தொடர்ந்து எரிவாயு கசிவு ஏற்பட்டதால் விபத்து நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்