அடிக்கடி ரிப்பேர் ஆன புது பைக்.. எரிச்சலான உரிமையாளர்.. ஷோரூம் வாசலில் செய்த அதிர்ச்சி சம்பவம்

x

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலில் புதிதாக வாங்கிய இருசக்கர வாகனம் அடிக்கடி பழுதாவதாக கூறி, ஷோரூம் வாசலில் அதை இளைஞர் எரிக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரியபாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், திருமுல்லைவாயலில் உள்ள ஒரு ஷோரூமில் புதிதாக வாங்கிய இரு சக்கர வாகனம், கடந்த 3 மாதங்களில் 4 முறை பழுதானது. இதனால் நொந்துபோன அவர், ஷோரூமில் முறையிட்டபோது, அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் கோபமடைந்த அவர், தனது இரு சக்கர வாகனத்தை தீயிட்டு எரிக்க முயன்றார். தகவல் அறிந்து வந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, வாகனத்தை பழுது நீக்கி தருவதற்கு ஷோரூம் நிர்வாகிகள் ஒப்புக்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்