முதியவரை தாக்கி பணம் பறிப்பு, பேருந்து நிலையாயத்தில் காத்திருந்தவரை... மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

x

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் முதியவர் ஒருவரை தாக்கி மர்மநபர்கள் பணம் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரத்தினக்காரன். இவர் குக்கர் தயாரிப்பு நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வரும் நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள கடைகளில் பணம் வசூல் செய்து விட்டு பேருந்து நிலையம் வந்துள்ளார். சுமார் 1 லட்சத்து 28 ஆயிரம் பணமுடன் வந்த முதியவரை நோட்டமிட்ட மர்மநபர்கள், முதியவரை சரமாரியாக தாக்கி பணம் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் படுகாயமடைந்த முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்