சிசிடிவிக்கு ஸ்பிரே அடித்து 19 லட்சம் கொள்ளை - விரட்டிய போலீஸ்.. பதறிய திருடன் | ATM Robbery

x

ஜெகத்தியாலா மாவட்டம் கோரண்ட்லாவில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம் மையத்தில் புகுந்த மர்மநபர்கள் 4 பேர், அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக அங்கிருந்த சிசிடிவி கேமராக்களுக்கு ஸ்பிரே அடித்தனர். பின்னர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, அதிலிருந்த 19 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பைகளில் நிரப்பியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது ஏடிஎம் மையத்திற்குள் பணத்துடன் வெளியே வந்த கொளளையர்கள், போலீசாரைக் கண்டதும், பணப்பையை வீசிவிட்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் பையில் இருந்த பணம் சாலையில் சிதறி காற்றில் பறந்தன. பின்னர் கொள்ளையர்கள் 4 பேரையும் மடக்கிப் பிடித்த போலீசார், காற்றில் பறந்த ரூபாய் நோட்டுகளை மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்