பூக்கடைக்காரர் வீட்டுல 7 முழம் பூ கிடைக்கும்.. ஆனா இங்க கிடைச்சதோ 7 அடி நீள பாம்பு

x

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அகிழ்மனைத்தெரு பகுதியில் குடியிருக்கும் பூ வியாபாரம் செய்து வரும் ராஜா முகமது என்பவரது வீட்டின் பின்புறம் பகுதியில் சீதளிக்குளம் உள்ளது இவரது வீட்டின் பின்புற பகுதியில் பாம்பு புகுந்ததை இவர்கள் வீட்டின் அருகில் உள்ளவர் கூறியதை அடுத்து அப்பகுதியில் வீட்டில் உள்ளவர்கள் பார்த்தபோது வீட்டின் மேற்கூரை பகுதியில் ஓட்டு அடுக்குகளின் பாம்பு இருந்தது கண்டு உடனடியாக அருகில் இருந்த கடைக்காரர் பீர்முகமது தகவல் தெரிவித்தனர் இதனை எடுத்து நகைக்கடை உரிமையாளர் பீர்முகமது திருப்பத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் தகவலின் பெயரில் நிறைய அலுவலர் ஆனந்த சுப்பிரமணியம் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துரிதமாக பணிகளை மேற்கொண்டனர் இதனை அடுத்து மேழ்புற பகுதியில் தீயணைப்பு வீரர்கள் பாம்புகளை பத்திரமாக பிடிக்கும் உபகரணங்களை கொண்டு ஓட்டு பகுதியினை மெதுவாக நீக்கி 7 அடி நீளம் இருந்த சாரை பாம்பை பத்திரமாக உயிருடன் மீட்டனர், 7 அடி நீள சாரை பாம்பை பத்திரமாக உயிருடன் மீட்டு திருப்புத்தூர் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்