பைக் சாகசத்தில் ஈடுபட்டு கெத்து காட்டிய இளைஞர் கொத்தாக தூக்கிய போலீஸ் தினமும் 2 மணி நேரம் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த உத்தரவு

x

காரைக்குடியில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை, தினமும் இரண்டு மணி நேரம் போக்குவரத்தை சீர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர், காரைக்குடி கல்லூரி சாலையில் மாணவிகள் முன்பு பைக் சாகசத்தில் ஈடுபட்ட பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் மகேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களது இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதில் இருசக்கர வாகனம் ஓட்டிய நபரும், பின்னால் வீடியோ எடுத்து வந்த நபரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். மாணவன் மகேஸ்வரனுக்கு ஒரு வாரத்திற்கு, தினமும் 2 மணி நேரம் போக்குவரத்தை சரி செய்யும் பணியினை வழங்கி உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்