ஆந்திர முதல்வரின் தங்கையை காருடன் இழுத்து சென்ற சம்பவம் - ஆளுநர் தமிழிசை ட்வீட்

x

பெண் அரசியல் தலைவர்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என ஆந்திர முதல்வரின் தங்கை ஷர்மிளாவிற்கு ஆதரவாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை குரல் கொடுத்துள்ளார்.

தெலங்கானாவில் ஆளும் முதல்வர் சந்திரசேகரராவுக்கு எதிரான தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா, தெலங்கானா முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், அவர் முதல்வர் சந்திரசேகரராவின் வீட்டை நோக்கி தனது காரில் பயணித்து கொண்டிருந்தார்.

இதனை தடுத்த போலீசார், ஷர்மிளாவை கைது செய்ய முற்பட்டனர்.

ஆனால் ஷர்மிளா காரில் இருந்து இறங்க மறுத்துவிட்டார். இதனால் அவரை காருடன் டோவ் வண்டியில் இழுத்து சென்று, போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்