"அசம்பாவிதங்கள் இல்லா ஆங்கில புத்தாண்டு" - டிஜிபி பாராட்டு | TN Police

x

புத்தாண்டு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு, டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டங்கள், எந்தவித அசம்பாவிதங்களும், விபத்துகளும் இன்றி சிறப்பாக நடந்து முடிந்ததாக குறிப்பிட்டுள்ள அவர், அதற்காக காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட அனைத்து காவலர்களுக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கியதற்காக பொதுமக்களுக்கு தனது மனமார்ந்த நன்றிகளையும் டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்