7 மணி நேரத்திற்கும் மேல் வெள்ளத்தில் தன்னந்தனியாக போராடும் யானை... யானையின் மரண போராட்டம்

x

கேரளா மாநிலம் திருச்சூரிலுள்ள சாலக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கில் ஆற்றின் நடுவில் சிக்கிய காட்டுயானை மெல்லமெல்ல நீந்தி கரைக்கு அருகில் சென்றுள்ளது: வனப்பகுதிக்குள் செல்ல 10 மீட்டர் தூரம் மட்டும் உள்ளது:

  • கேரளா மாநிலத்தில் கனமழை தொடர்வதால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் திருச்சூர் மாவட்டத்தில் கனமழை தொடர்கிறது.
  • சாலக்குடி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.இந்நிலையில் அதிரப்பள்ளியில் சாலக்குடி ஆற்றின் நடுவில் ஒரு காட்டுயானை வெள்ளத்தில் சிக்கியுள்ளது.
  • யானையால் வெள்ளத்தை கடந்து கரைக்கு வரமுடியாமல் சிக்கி தவித்து வந்த நிலையில் யானை மெல்ல மெல்ல நகர்ந்து நீந்தி கரைக்கு அருகில் சென்றுள்ளது.கரைக்கு செல்ல 10 மீட்டர் மட்டுமே உள்ளது.
  • யானை வனப்பகுதிக்குள் இனி சிரமமின்றி சென்று விடும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கரைபகுதியில் நின்று வனத்துறையினர் மற்றும் மீட்பு படையினர் யானையை கண்காணித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்